உறக்கமற்ற என் இரவுகளை
திசைமாறும் பிறை மணல்மேடுகளின்
நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறேன்
தூரத்து இரவின் பாடலை
வான்நீளும் தீயின் நாவுகளை
அசைப்போட்டுக்கிடக்கும் ஒட்டகங்களை
கரும்பனையாகும் பேரீச்சை மரங்களை
வரிகள் தோறும் இடம்விட்டே
எழுதி வைத்திருக்கிறேன்
விடியலின் பெரும் தீயில்
வெந்திருக்கும் வார்த்தைகளை
தேடிக்கொள்வார் யாருமில்லையெனினும்
இன்னுமொரு இன்னுமொரு இரவுகளிலும்
எழுதி வைத்தே செல்வேன்
0 சொல்லிட்டுப்போனவங்க:
Post a Comment